p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Sunday, March 18, 2012

அம்மா


அம்மா என்றவொரு சொல்லினுள்ளே
அகிலமெலாம் அதிசயத்து அடங்கிவிடும்
இம்மையிலும் மறுமையிலும் அன்னையின்றி
இங்குவொரு வாழ்வெமக்கு இருந்திடுமோ?
சும்மாவே உதவாத உலகத்திலே
சுகத்தைவிட்டு சுமைமறந்து சுமந்தவட்கு
சிம்மாசனம் வேண்டாம் அவள்மகிழ்ந்து
சிரிக்கவொரு வார்த்தையேனும் சிந்திவிடு

பாட்டுபாடித் தூங்க வைத்தாள் பசியெடுத்தால்
பதபதைத்து உணவூட்டும் பாசத்தோடு
போட்டிபோட எதுவுண்டு உலகத்திலே
பொறுமையுடன் வளர்த்ததெமைப் பெற்றவளே
ஏட்டறிவும் எழுத்தறிவும் போததென்று
உலகறிவும் நாமறிய வைத்து தாயால்
ஈட்டிய நற்சாதனையில் ஏதினைச்சொல்ல
ஈன்றவுன்னை மறந்திடுமா? இதயமென்றும்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது