p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Saturday, September 19, 2009

மௌனத்தைக் கலைத்திடு

வாடிக் கிடக்குது உறவுகள் - தமிழ்
வாழ்ந்த மண் இன்றித் தவிக்குது
ஆடி அலையுது உயிரெல்லாம் - எங்கும்
ஆக்கிரமிப்புப் போர் நடக்குது
நாடி நரம்பெல்லாம் ஓயுது - தமிழ்
நரகம் என்றொன்றை ஆக்குது
கூடி அழியுது தமிழினம் - எங்கும்
குற்றுயிர் ஓலமே கேட்குது

குருதியில் நனையுது தமிழ்நிலம் - எங்கும்
குழிகளுள்ப் பிணங்கள் குவியுது
கருகி யழியுது எமதுமண் இந்த(க்)
காட்சிகள் கண்களை வலிக்குது
உருகி அழைக்கிறோம் உலகினை - இந்த
உண்மையை உணர்த்தத் துடிக்கிறோம்
மருவி மறைந்துமே போவதேன் - தமிழ்
மகிழ்ந்திட மௌனத்தைக் கலைத்திடு

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது