உன்னால் உறங்க முடிகிறதோ?
வானை மறைத்துமழை பொழிகையிலே
வருவதை உண்ர்த்த ஒலி தருகையிலே
ஊனை உருக்கும்குளிர் பிறக்கையிலே
உடலை வருத்தி நாம் உழைக்கையிலே
சேனை மண்ணைக் காக்கையிலே
செழிப்புடன் நல்யாழ் ஒலிக்கையிலே
பூனை போல்நீ உறங்குவதோ
புலியாய் மீண்டும் எழுதமிழா!
பகலை மறைக்கும் மைமுகில்கள்
பார்வை கெடுக்கும் மின்னல்நதி
நகலை ஒழிக்கும் நாகரீகம்
நாறி உலையும் மனிதநேயம்
அகல விரியும் ஆதிக்கம்
அதனை அழிக்க அரியபடை
பகலைப் பகலாய் இருத்திடவே
பருதி போல்நீ எழுத்மிழா!
மண்ணைக் காத்த மாவீரர்
மடிவை யெண்ணாப் போர்வீரர்
கண்ணை மூடா வேவுப்புலி
கவலை யற்ற கரும்புலிகள்
திண்மம் நிறைந்த கடற்பிரிவு
திறமை மிக்க வானெதிர்ப்பு
உண்மை யீழம் பிறக்கையிலே
உன்னால் உறங்க முடிகிறதோ?
வருவதை உண்ர்த்த ஒலி தருகையிலே
ஊனை உருக்கும்குளிர் பிறக்கையிலே
உடலை வருத்தி நாம் உழைக்கையிலே
சேனை மண்ணைக் காக்கையிலே
செழிப்புடன் நல்யாழ் ஒலிக்கையிலே
பூனை போல்நீ உறங்குவதோ
புலியாய் மீண்டும் எழுதமிழா!
பகலை மறைக்கும் மைமுகில்கள்
பார்வை கெடுக்கும் மின்னல்நதி
நகலை ஒழிக்கும் நாகரீகம்
நாறி உலையும் மனிதநேயம்
அகல விரியும் ஆதிக்கம்
அதனை அழிக்க அரியபடை
பகலைப் பகலாய் இருத்திடவே
பருதி போல்நீ எழுத்மிழா!
மண்ணைக் காத்த மாவீரர்
மடிவை யெண்ணாப் போர்வீரர்
கண்ணை மூடா வேவுப்புலி
கவலை யற்ற கரும்புலிகள்
திண்மம் நிறைந்த கடற்பிரிவு
திறமை மிக்க வானெதிர்ப்பு
உண்மை யீழம் பிறக்கையிலே
உன்னால் உறங்க முடிகிறதோ?
0 Comments:
Post a Comment
<< Home