p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Friday, December 07, 2007

பெண்

கற்றறிந்தார் பெண்கள் தங்கள்
கரும் இருளை அகற்றினார்
சுற்றி வந்தார் விண்வெளியை(ச்)
சுழன்று வென்றார் போர்களில்
கொற்றவளாய் உள்ளார் நன்றாய்(க்)
குடும்பங்களைக் காக்கிறார்
பற்றறுந்து தவிக்கிறார்கள்
பிறந்த மண்ணைப் பிரிந்ததால்

அடுப்படியின் வாழ்வு நின்று
அகலக் கால் பதித்தனர்
எடுத்த வேலை எதுவெனினும்
எளிதாய் வெற்றி கண்டனர்
ஒடுக்க எண்ணும் தீயோர்தன்னை
ஓட ஓடத் துரத்தினர்
கடுக்கும் காதல் கண்ணைமூட(க்)
கனதி யுற்றார் வயிற்றிலே

அழகு மட்டும் பெண்களில்லை
அனைத்தும் பெண்கள் என்றனர்
உலகம் எல்லாம் உணரவைத்தார்
உண்மைப் பெண்கள் வாதத்தை
பழமை வென்றார் புதுமைகொண்டார்
பயத்தை நீக்கிச் சென்றிட
களவு உற்றார் கருகிநின்றார்
கயவர் செய்த பாவத்தால்

தலைகள் சுற்றும் விலையில்(ப்)
பெண்ணைத் தாரமாக்கும் தமிழரை
உலையில்ப் போட்டு உஷ்ணமாக்கத்
துணிந்தார் என்ற போதிலும்
சிலையாய் உள்ளார் சிற்பமானார்
சிறகொடிந்த பறவையாய்
விலைகள் கூறி அழகைவிற்கும்
விந்தை என்று அகன்றிடும்

1 Comments:

  • At 11:30 AM, Anonymous Anonymous said…

    "Azhaku mattum penkal alla ....
    Anaiththum penkal endranar.."

    Simply superb...hats off bro.

     

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது