p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Saturday, October 22, 2005

கதிரவன்

தங்குதடை யின்றி வரும்
தென்ற லொடு கூடி
கங்குலை விலக்கித் தமிழ்(க்)
குயிலி னிசை பாடி
பொங்கு மெழில் நங்கையென(ப்)
புதுப் பொலிவு காட்டி
எங்குமொளி பாச்சி யதை(த்)
திங்களுக் கும் ஊட்டி

ஞாலமது போற்று கின்ற
நல்ல பொற் கதிரே
காலமெலாம் வாழ்வு தரும்
கருணை யுள்ள உயிரே
கோலமது போடு கின்ற
வான வில்லின் முதலே
ஞாலமதைத் தோற்று வித்த
நா மறிந்த இறையே

மண்ணு மில்லை விண்ணு மில்லை
மா கடலு மில்லையே
எண்ண எண்ண அழகுதரும்
ஏது மிங்கு யில்லையே
உண்ணுதற் குணவு மில்லை
உழ வெதுவு மில்லையே
கண் கவரும் தாரணியின்
காதலனே வான் எழுவாய்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது