p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Sunday, January 23, 2005

காதலாலே!

கணப்பொழுது அதிகமடி கண்ணே உன்னைக்
கண்டு நான் கதைத்திட்ட காலம் சொல்ல

இமைப்பொழுது குறைந்ததடி எழிலெ உன்னை
என்றும் நான் என்னருகில் ஏற்கும்போது

மின்னுகின்ற நேரத்திலும் குறைவுதானே
மேதினியில் உன்னை நான் காணும் காலம்

என்னவளே! என்னுடலே! எந்தன் உயிரே!
என்றென்றும் நெஞ்சினிலே ஆடும் மயிலே!

கூவுகின்ற குயிலாகக் கண்டேன் உன்னைக்
கொஞ்சுகின்ற குழவியாகப் பார்த்தேன் நானும்

வீசுகின்ற தென்றலாக வருவாய் என்னுள்
விருந்தாகும் வளியாகச் சுழன்றாய் மூச்சாய்

சிறுவயதில் மழையழகை இரசித்ததுண்டு
சிறந்ததென்று வானவில்லை வியந்ததுண்டு

கொத்துக் கொத்தாய்ப் பூத்தமலர் பார்த்ததுண்டு
கொந்தளிக்கும் கடலழகில் கழித்ததுண்டு

எத்தனையோ அழகுகளைக் கண்டபோதும்
உன்னழகே தனியழகாய்க் கண்டுகொட்டேன்

நித்திரையில்ப் பிதற்றுகின்றேன் உந்தனாலே!
நிழல்போலேத் தொடர்கின்றாய் காதலாலே!

2 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது