p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Saturday, January 08, 2005

புண்பட்ட தமிழ்

என்னை நான் வெறுக்கின்றேன் - இந்த
எளிய வாழ்வினை வாழ்வதனால்
தன்னலம் உள்ளவர்தான் - இங்கு
தமிழுக்காய் வாழ்வதாய் உரைக்கின்றார்
பொன்பொருள் இருப்பதனால் - அவர்
பெரும்பெரும் அறிஞராய்த் திகழ்கின்றார்
உன்னையே சரணடைந்தேன் - என்
உயிருடல் அனைத்தையும் உனக்களித்தேன்

கண்மணி வெற்றிடம்தான் - அது
கணம்தனும் மூடிடில் பார்வையுண்டோ?
மண்ணினுள் நீருளது - அதன்
மகத்துவம் அறியாது அலைவதைப்போல்
புண்பட்ட உரிருளது - இங்கு
புதுப்புது ஆற்றல்கள் புதைந்துளது
விண்ணிலே உளஇறையே! - உனை
விட்டிடில் எனக்கருள் எவர்தருவார்?

6 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது