p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Tuesday, July 13, 2004

தமிழரின் சந்ததிக்கு!

சிறுவர்களே! சிறுமியரே!
நாளைய புலம் பெயர்ந்த
தமிழரின் சந்ததியே!

பொறுமையாக வாழுங்கள்!
தேவைக்குப் பொங்கிடுங்கள்!
பகைமையை மறவுங்கள்!
பகமைக்காய் வருந்துங்கள்!
சுகந்திரமாய்த் திரியுங்கள்! பிறர்
சுகந்திரத்தைக் கெடுக்காதீர்!
பெரியோரை மதியுங்கள்! வெறும்
பெருமைக்காய் வெள்ளையராய் விளங்காதீர்!
ஒருமையாய் இருங்கள்! வெற்று
உடம்பிற்காய் உங்களிடை
உதைபட்டுக் கொள்ளாதீர்!
அடிபாடு இதற்கெல்லாம் அவசியமா?
தெருத்தெருவாய் சொறிநாயாய்(க்)
கடிபட்டுக் கொள்ளாதீர்!
உழைப்பின்றி ஊதனத்தைத் தேடாதீர்! கடும்
உழைப்பின்றிக் கிடைப்பதெல்லாம்
உரமாக்கிக் கொள்ளாதீர்!

அடிவானில் விடிவெள்ளி தெரிந்திடும் அங்கே
கதிரவனாய் உம்மெழிற்சி உலகிற்குப் புரிந்திடும்.




0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது