p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Tuesday, June 29, 2004

முழுமதி எழுந்தது

கண்ணியமாகவே விண்ணை; நற்
கற்புடன் இருத்திட துகிலென முகில்கள்
எண்ணிய வடிவிலே வந்து; விண்ணில்
எழுந்துமே எழிலுற்றுப் பரந்தனதானே
கண்களை மூடிடும் போது; வரும்
கருநிற நிலையினை உணர்வது போலே
விண்ணெலாம் காரிருள்தானே; அதில்
வீசிடும் ஒளியுடன் மலர்வகைதானே

ஓடி ஒளித்தது சூரியன்; எங்கும்
ஒளியை மறைத்து எழுந்தது இருள்மயம்
நாடி வந்தன கூட்டினை; பறவைகள்
நானிலம் சுற்றியே இருப்பிடம் திரும்பின
வாடிய வயிற்றினால் அலரிய குழவிபோல்
வந்தொரு ஆந்தையும் அலறிற்று; குழறிற்று
மூடிய அவள்முகம் திறந்தது போலவே
முழுமதி வானிலே எழுந்தது; பிறந்தது.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது