p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Sunday, June 13, 2004

'டமில்' நண்பர்

வெளிநாட்டு நண்பர்

வெளிக்கிட்டார் ஊருக்கு


ஊரிலே,

'மம்மி' என்று தாயை மனமுவந்து அழைத்திட்டார்

'டடி' என்று தந்தை கால்களில் விழுந்திட்டார்

'சிஸ்டர்' என்றார் 'பிறதர்' என்றார்

'அங்கிள்', 'அன்ரி' என்று அழைத்து மகிழ்ந்திட்டார்


பெருமையாய்த் தாய் சொன்னாள்

'கனகாலம் வெளிநாட்டில் இருந்ததினால்

தமிழை அவன் மறந்திட்டான்'
என்று


அந்நேரம்,

இவனை யாரென்று அறியாத

விதியொன்று வீட்டு நாயுருவில்

பாய்ந்ததிவன் பக்கம்


'ஆச்சி நாயை பிடியணை' என்று

ஐயோ அம்மா சொல்லி அழைத்திட்டான்

போச்சு அவன் ஆங்கிலம்

புகுந்தது தமிழ்மொழி.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது